K U M U D A M   N E W S

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு கட்சியின் ஆசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.

தமிழ் ஆசிரியர்களுக்கு எதற்கு இந்தி, சமஸ்கிருதம்?.. திணிப்பது அப்பட்டமாக தெரிகிறது.. சு.வெ. காட்டம்

S. Venkatesan About Hindi Sanskrit Language : தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS Case Update : தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இபிஎஸ் ஆஜராவதில் இருந்து விலக்கு

Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மகாவிஷ்ணு விவகாரம்.. அதிகாரிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை

மகாவிஷ்ணு போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார் 

சென்னையில் அதிகாலையில் ஷாக்.. சூட்கேசில் கிடந்த பெண் சடலம்.. முக்கிய குற்றவாளி கைது..

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கேரளாவை அலறவிடும் நிபா.. பறிபோன உயிர்..

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கிடுகிடுவென சரியும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் பிரபல திரையரங்கிற்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.6செ லட்சம் வரியை செலுத்தாதல் சென்னை நங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்