K U M U D A M   N E W S
Kumudam Ad

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... 27 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

ஆடை விதிமீறல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது... உதயநிதிக்கு எதிராக மேலும் ஒரு மனு

முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஆடை  விதிகளை வகுக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கள்ளச்சாரம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளச்சாரயம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூச்சுத் திணறலால் மாணவிகள் அவதி... தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

24 மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் டிராபிக்..GST சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசல் இன்னும் சீராகாமல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு.. மாணவிகள் மயக்கம்... முற்றுகையிட்ட பெற்றோர்கள்

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.