K U M U D A M   N E W S
Kumudam Ad

பவன் கல்யாண் கட்சியில் நடிகை கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவாமிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்..

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தூக்க மாத்திரை கொடுத்து குழந்தை கொலை.. தாய் தற்கொலை முயற்சி

கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் மீண்டும் 100 ரூபாயை கடந்ததும் விற்பனை செய்யப்படுகிறது.

லாரி உரிமையாளருடன் தகாத உறவு.. கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி

லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பழநி முருகன் கோவில்: தண்டு விரதம் நிறைவு செய்து பக்தர்கள் வழிபாடு

6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.

தவறி விழுந்த மாணவி.. தலையில் சிக்கிய டயர்.. ஆரணி அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆரணி அருகே அரசுப் பேருந்தில் சீட் பிடிக்க முயன்ற கல்லூரி மாணவி தவறி விழுந்ததில், டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.