K U M U D A M   N E W S

mi

வாய் பேச்சால் வந்த வினை.. மகாவிஷ்ணுவுக்கு இன்று மிக முக்கிய நாள்!

மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

வெள்ளையன் மரணம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி.. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுமா?

வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

BREAKING || ஹேமா கமிட்டி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

BREAKING || தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் - விரைவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

LIVE | விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

போதை பொருட்கள் புழக்கம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

விஜய் கட்சியால் வாக்குகள் சிதறுமா..? - பிரேமலதா விஜயகாந்த் நச் பதில்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.