இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி மீது போலீசார் வழக்கு.
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.
இந்தியாவைச் சேர்ந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருது அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் முன்பே குவிந்த பாமகவினரை போலீசார் முன்பே கைது செய்ததாக தகவல்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அனைவரும் வெட்கபட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"