K U M U D A M   N E W S

Madurai

Mysterious Fever : மதுரைக்கு வந்த சோதனை...மலைத்து போன மக்கள்

Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Live : Elai Kaththa Amman Temple : சிறுமிகளை தெய்வமாக தேர்வு செய்து வழிபாடு

Melur Elai Kaththa Amman Temple in Madurai : மதுரை மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்து வழிபாடு. 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபாடு நடத்தும் திருவிழா

Live : Madurai Womens Hostel Fire Accident : விடுதியில் தீ விபத்து - மேலும் ஒரு பெண் பலி

Madurai Womens Hostel Fire Accident : மதுரை கட்ராபாளையம் தனியார் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

#JUSTIN : வி.சி.க கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் அகற்றப்பட்ட விசிக கொடிக்கம்பம் திரும்ப ஒப்படைப்பு.

BREAKING | திமுக நிர்வாகிகளிடையே மோதல்

மதுரையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் அக்கட்சியின் செயலாளர் புகாரளித்துள்ளார்

#BREAKING : மகளிர் விடுதியில் தீ விபத்து - கட்டடம் இடிப்பு | Kumudam News 24x7

10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் கட்டடத்தை இடித்து வருகின்றனர்.

#BREAKING | மதுரையை உலுக்கிய சம்பவம் - டாக்டர் அதிரடி கைது | Kumudam News 24x7 | Madurai

மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது

#BREAKING || தீ விபத்து - மதுரை விடுதி, கடைகளுக்கு சீல் | Kumudam News 24x7

பாதுகாப்பற்ற நிலையில், இருக்கும் விடுதி, அதே கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்

மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து.. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

மதுரை: மகளிர் விடுதியில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து. படுகாயம் அடைந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. விடுதி உரிமையாளரை கைது செய்த காவல்துறை

#BREAKING || 2 பெண்கள் பரிதாபமாக பலி - மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்

#BREAKING : மதுரையில் விரைவில் 24 மணி நேர விமான சேவை | Kumudam News 24x7

Madurai Airport: அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளதாக தகவல். 

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

ஆதார் சேவை மையத்தில் குவிந்த மக்கள்

மதுரை கே.கே.நகரில் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை நெடுகிலும் குழந்தைகளுடன் ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வந்த மாணவர்கள் வெயிலில் தவிப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

Old Age Home in Tamil Nadu: மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் கட்ட உத்தரவு | District Wise Old Age Home

Old Age Home in Tamil Nadu: சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தபட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

Madurai: கரும்பு, வாழை தாரை எடுக்க போட்டிப்போட்ட பொதுமக்கள்!

udhayanidhi stalin Madurai Event: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் கரும்பு, வாழை தாரை பொதுமக்கள் எடுத்து சென்றனர்.

“சாமி ஆடிய மாணவிகள்... சின்ன திரை பிரபலம் ராமர் உரை” மதுரை புத்தகக் கண்காட்சியில் அட்ராசிட்டி!

மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.

சாமி ஆடி மயங்கி விழுந்த மாணவிகள் - மீண்டும் அரசு பள்ளியில் கிளம்பிய சர்ச்சை

School Students dance in Marudai BookFair: மதுரை புத்தக்கண்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பசாமி பாடலை கேட்டு மாணவிகள் எழுந்து நின்று சாமியாடியதால் பரபரப்பு.

மதுரையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்

மதுரை மாவட்டத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி. பரிசோதனையில் டெங்கு உறுதியான நிலையில் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

THE GOAT FDFS விஜய் ரசிகர்கள் அட்டகாசம்

G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்