K U M U D A M   N E W S

'முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன்’.. அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு!

''நான் நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். உங்களின் (மக்கள்) வாக்குகள் தான் எனது நேர்மையை நிரூபிக்கும் சான்றிதழ்'' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

#justin || சிபிஎம் அலுவலகத்தில் முதலமைச்சர்

சென்னை தியாகராய நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.

’பாமக சாதிக்கட்சி என்றால், விசிக என்ன கட்சி?’.. திருமாவளவனுக்கு அன்புமணி பதிலடி!

''நானும் சரி, திருமாவளவனும் சரி ஆட்சி அதிகாரம் வேண்டும் என்றுதான் கட்சி நடத்துகிறோம். திருமாவளவனும் தன்னுடைய ஆட்சி வர வேண்டும் என்றுதான் விரும்புவாரே தவிர, திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். ஆகவே திருமாவளவன் பேசியது சரி'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

'மெய்யழகன்' படம் பார்த்தால் கண்டிப்பா மன்னிப்பு கேட்ப்பீங்க.. 100% உறுதியாக சொன்ன இயக்குனர்

LIVE : பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்

#JUSTIN | முதலமைச்சர் ஓணம் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கு இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

#JUSTIN || ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 17,000 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,000 கன அடியாக உயர்வு

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.