K U M U D A M   N E W S

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கோட்டு சூட் போட சொன்னது எதற்காக? தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசிய திருமா!

”ஆட்டோ ஓட்டுபவர், ஆடு மாடு மேய்பவர், கட்டிட வேலை செய்கிறவர்கள் எல்லாம் கோட்டு சூட் அணிந்து மிடுக்காக நடப்பதை நான் பார்க்கவேண்டும். அவர்கள் தங்களே அம்பேத்கராக உணர வேண்டும். அது விடுதலை சிறுத்தைகளின் எழுச்சிக்கு சான்று” என தொல்.திருமாவளவன் தொண்டர்கள் முன் உரையாற்றியுள்ளார்.

விஜய்யுடன் பேச்சுவார்த்தையா? எங்களுக்கு எந்த தொடர்புமில்லை: ஜாக்டோ ஜியோ விளக்கம்

கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ சார்பில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்ததாக வெளியான ஊடகச்செய்திக்கு, ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியில் கூட்டா? வேட்டா? பஞ்சாயத்தை இழுத்த அமித்ஷா..! கணக்கை மாற்றும் எடப்பாடி? | EPS | Amit Shah

ஆட்சியில் கூட்டா? வேட்டா? பஞ்சாயத்தை இழுத்த அமித்ஷா..! கணக்கை மாற்றும் எடப்பாடி? | EPS | Amit Shah

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை - 131வது இடத்திற்கு சரிந்த இந்தியா!

உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.

தந்தை-மகன் மல்லுக்கட்டு தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமேக்ஸ் காட்சி!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.

எடப்பாடி சுயமாக சிந்திப்பவர்.. நல்ல முடிவெடுப்பார்: அப்பாவு பேட்டி

”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.