மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-10-2024 | Mavatta Seithigal
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-10-2024 | Mavatta Seithigal
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
தவேக, மாநாட்டிற்கு நான் போகவில்லை, விஜயகாந்துக்கு பின் நடிகர் விஜய் மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
"விஜயகாந்திற்கு பிறகு விஜய் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது" - விஷால்