K U M U D A M   N E W S

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

Game Changer: விட்டதை பிடித்த ஷங்கர்... ராம்சரணின் கேம் சேஞ்சர் ஓடிடி ரைட்ஸ்... இத்தனை கோடியா?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார். 

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

த.வெ.க மாநாடு மழையால் தடையா?.. 22ஆம் தேதி மீண்டும் மழைக்கு வாய்ப்பு

வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சூர்யா 44 கேங்ஸ்டர் மூவி கிடையாது.. ரஜினி சார் அப்படி கேள்வி கேட்டார்..” கார்த்திக் சுப்புராஜ் ஓபன்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அப்படத்தின் கதை குறித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் மனம் திறந்துள்ளார்.