K U M U D A M   N E W S

01 PM Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024

இன்றைய விரைவுச் செய்திகள் | 05-11-2024

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil

01 மணி தலைப்புச் செய்திகள்

சாலை சீரமைப்பு பணிகள் - சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு விடாத கர்மா- மதுரையில் இருந்த வந்த பேரிடி

கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.

குடும்பமாக பைக்கில் சென்ற நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. துடிதுடித்து பலியான பிஞ்சு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

வெளியே சொல்லமுடியாத வேதனை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் வீட்டின் உள்ளே... ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

சென்னை வளசரவாக்கத்தில் ரக்‌ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து - நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து புகார்

சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

குழந்தை தொழிலாளர் உட்பட 5 பேர் கொத்தடிமைகள் மீட்பு - வளசரவாக்கத்தில்  அதிர்ச்சி

17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய 3 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சந்தியா என்ற பெண் நான்கு வருடம் பணிபுரிய 4 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித்துள்ளார். 

மாமூல் தராததால் ஆத்திரம்-விடுதி உரிமையாளரை அடித்து உதைத்த அதிமுக நிர்வாகிகள்

தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். 

திடீரென கேட்ட 'டமால்' சத்தம்.. சென்னையே அலற நடந்த பயங்கரம்

சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.