K U M U D A M   N E W S

government

அரசுப்பேருந்தை அலட்சியமாக ஓட்டிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

#JUSTIN : இலங்கை தமிழர் குடியிருப்பின் அவல நிலை

ஆம்பூர் அருகே திறந்து ஒரு மாதத்திற்குள் பெயர்ந்து விழுந்த இலங்கை தமிழர் குடியிருப்பின் மேல்தள பூச்சுகள். மின்னூர் பகுதியில் சுமார் ரூ.12 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி திறப்பு

100 Days of PM Modi 3.0 : 100 நாட்களில் பிரதமர் மோடி செய்தது என்ன?.. ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட அமித்ஷா!

100 Days of PM Modi 3.0 BJP Goverment : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 3 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இதில் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகளும், கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டப்படும்.

மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலம்! அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளம்

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

#JUSTIN : பணம் வாங்குவதில் மருத்துவமனை ஊழியர்களிடையே தகராறு | Kumudam News 24x7

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில் தகராறு.

Chennai Metro Rail Project : சென்னை மெட்ரோ 2 திட்டம் - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு

Minister Thangam Thenarasu About Chennai Metro Rail Project: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு இதுவரை 11 ஆயிரத்து 762 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு | Kumudam News 24x7

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தரையில் கிடந்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள்.. 'குமுதம் செய்திகள் எதிரொலி'யால் நடவடிக்கை

வெறும் தரையில் பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் படுக்க வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக, 'குமுதம் செய்திகள்’ செய்தி வெளியிட்டதை அடுத்து, எம்.எல்.ஏ எழிலரசன் விரைந்து நடவடிக்கை எடுத்தார்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா? - RTI சொல்வது என்ன?

Caste Wise Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசின் அனுமதி தேவையா அல்லது மாநில அரசே நடத்திக்கொள்ளலாமா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெளிவு பிறந்துள்ளது.

அச்சுறுத்தும் குரங்கம்மை.. உடனே இதை செய்யுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வார்னிங்!

18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட ஆண்களையே குரங்கம்மை அதிகம் தாக்குகிறது. குறிப்பாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட 50% பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை குரங்கம்மை அதிகம் தாக்குகிறது.

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி

மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று

தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை

ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.