சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.