K U M U D A M   N E W S

Chennai

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி விழுந்த காவலர் உயிரிழப்பு

சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 11வது மாடியில் இருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது தவறி விழுந்ததில் உயிரிழந்தார். 

மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார். 

குடியிருப்புக்குள் புகுந்த ஏரி உபரிநீர்... கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்| Kumudam News 24x7

சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.... எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 18) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய உச்சம் தொடும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிடு கிடு உயர்வு.... ரேட்ட கேட்டாலே தலை எல்லாம் சுத்துது!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 57,920க்கு இன்று (அக். 18) விற்பனை செய்யப்படுகிறது.

தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக... ஓபிஎஸ் கண்டனம்!

வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை - பிரதீப் ஜான்

நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

கனமழை – பள்ளி கல்லூரிகள் விடுமுறையா

சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு

உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையிலேயே கொட்டித்தீர்த்த கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. 

ஒட்டு போட்டவர்களுக்கு போட்டு அனுப்புறாங்க.. மார்கெட்டிங் தான் நடக்குது - தமிழிசை தாக்கு

திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

டீ குடிப்பதால் எதுவும் மாறாது.. சரளமாக பொய் சொல்கிறார்கள்.. சசிகலா தாக்கு

தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னையில் மீண்டும் பரபரப்பு... அதிரடி சோதனையில் குதித்த வருமான வரித்துறையினர்!

பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக். 17) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு... கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.