K U M U D A M   N E W S

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு... 2 முறை வழக்கு ஒத்திவைப்பு!

''அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் தேவைப்படும். ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது''

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி... இன்று சென்னை வருகிறார் மாயாவதி... போலீசார் குவிப்பு!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: நாளை காலை விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுப்பு... ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்... இரவிலும் பரபரப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. ''ஆனால் உண்மையான குற்றாவளிகளை போலீசார் கைது செய்யவில்லை'' என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... திமுக-காங்கிரசுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்... பரபரப்பு ட்வீட்!

''ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்துக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்''

Indian 2: இந்தியன் 2-வில் AR ரஹ்மான் வேண்டாம்... இதுதான் காரணம்... ஷங்கர் ஓபன்!

இந்தியன் 2 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் ஏன் இசையமைக்கவில்லை என இயக்குநர் ஷங்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

அரசியல் கொலை இல்லை; கொலை‌ மிரட்டல் குறித்து எந்த தகவலும் வரவில்லை - காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை‌ மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.