K U M U D A M   N E W S

விளையாட்டு போட்டியின் போது அசம்பாவிதங்கள்.. Idea கொடுத்த உயர்நீதிமன்றம்

விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் என நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூச்சுத் திணறலால் மாணவிகள் அவதி... தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

சென்னைக்கு படையெடுத்த மக்கள் - நிரம்பி வழியும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?- சீமான் சரமாரி கேள்வி

மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்