K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்...நயினார் நாகேந்திரன் பேச்சு

அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளியூர் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தாஜ்மஹால் முன் நின்ற மனைவியால் பரபரப்பு

உத்திரப்பிரதேசத்தில் கணவர் வீட்டில் இல்லாத போது மனைவி வேறொரு ஆணுடன் ஓடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பெண் போலீசிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை...திருச்சி மாநகராட்சி மேயர் விளக்கம்

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு: விளம்பர விளையாட்டாக மாற்றிய திமுக.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

குடிநீரில் கலந்த கழிவு நீர்.. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. திருச்சியில் பதற்றம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பாஜகவுக்கு தமிழகம் தான் ”வாட்டர்லூ”- MP திருச்சி சிவா சூளுரை

”தமிழகத்திற்கு போர் அறிவிப்பு வந்துவிட்டது. ஒரு புதிய படையெடுப்பு நடந்திருக்கிறது, பதுங்கி இருந்த பகைக்கூட்டம் வேறு சிலரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படையை கூட்டி வந்தாலும் சந்திப்பதற்கு தமிழ்நாடு தயாராக இருக்கிறது” என திமுக எம்பி திருச்சி சிவா பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.