K U M U D A M   N E W S

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

த.வெ.க. கொடியில் யானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.. பி.எஸ்.பி. தகவல்

தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.

#BREAKING: காங்கிரஸ் MLA - காவல்துறை இடையே வாக்குவாதம்

விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

ரஜினி உடல் நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய்யால் பாஜகவிற்கு தான் பாதிப்பு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை - துரை வைகோ அதிரடி

Durai Vaiko About Actor Vijay Party : நடிகர் விஜய் சமூக நீதியையும் மதசார்பின்மையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், பாஜகவிற்கு தான் பாதிப்பே தவிர, திராவிட கட்சிகளுக்கு அல்ல என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.