விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!
LIVE 24 X 7
