K U M U D A M   N E W S

ED

திருமணத்தை மீறிய உறவு: பொக்லைன் ஓட்டுநர் கொடூர கொலை.. நண்பர் கைது!

திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேபாள கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்: 60 பேர் கைது; பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை வங்கி மோசடி வழக்கு: 14 வருடங்களாகத் தேடப்பட்ட குற்றவாளி குவைத்தில் கைது!

சென்னை பாங்க் ஆஃப் பரோடாவில் ₹3.5 கோடி மோசடி செய்துவிட்டு, 14 வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளி முனாவர் கான், சர்வதேச போலீசாரின் உதவியுடன் குவைத் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடன் தொல்லை.. நகைக்கடைக்காரர்களை குறிவைத்து தொடர் திருட்டு.. 2 பேர் கைது!

நகைக் கடைக்காரர்களின் கவனத்தைத் திசைதிருப்பித் தங்க நகைகளைத் திருடி வந்த, டிப்-டாப் உடையணிந்த இரண்டு நபர்களை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இபிஎஸ் தலைமை இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது- டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.