வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
''பாஜகவில் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பேட்டியளித்தார். முழு தகவல்களை அறிய வீடியோவை காணுங்கள்