விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி | Kumudam News
விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி | Kumudam News
விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சி | Kumudam News
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக்கரம் கழன்றதால் மும்பையில் 75 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக போயிங் விமானத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், “ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் மீண்டும் பயணிக்க மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
துபாயிலிருந்து சென்னைக்கு 326 பயணிகளுடன், தரையிறங்க வந்த விமானத்தினை டார்கெட் செய்து மர்மமான முறையில், லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.