K U M U D A M   N E W S

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

'தமிழில் பேசாத பிகரை கழட்டி விட்டுருங்க'.. செல்வராகவன் சொல்கிறார்!

Director Selvaraghavan About Girls : ''உலகத்தில் நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் எல்லோரும் அவர்களின் தாய்மொழியில் தான் பேசுவார்கள். அது மட்டும் தான் பேசுவார்கள். அங்கு யாரும் இங்கிலீசில் பேச முயற்சி செய்ய மாட்டார்கள்'' என்று செல்வராகவன் கூறியுள்ளார்.

ஆளுநர் மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரங்களில் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரம்... முக்கிய வேண்டுகோள் வைத்த தேவஸ்தானம்

வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Chiranjeevi : டான்ஸ் கிங் அவதாரம்... கின்னஸ் உலக சாதனை படைத்த சிரஞ்சீவி... இப்படியும் ஒரு சம்பவமா?

Chiranjeevi Guinness Word Record : தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் சாதனை விருது பெற்று அசத்தியுள்ளார். எதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான் தரமான சம்பவமாக அமைந்துள்ளது.

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் வரை சென்ற திருப்பதி லட்டு.. சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு!

''திருப்பதி கோயிலில் பிரசாதாமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பொது சுகாதாரம் மற்றும் கோயிலில் புனிதத்தை அவமதிப்பதுபோல் உள்ளது'' என்று சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

TVK Vijay: ”மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது..” தவெக தோழர்களுக்கு பறந்த 8 கட்டளைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

கோலாகலமாக நடக்க உள்ள முதல் மாநாடு.. கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்

SPB: SP பாலசுப்ரமணியம் பெயரில் தெரு... முதலமைச்சருக்கு SP சரண் வைத்த கோரிக்கை!

சென்னை காம்தார் நகருக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

SL vs NZ Test Match : சுழல் வலையில் மிரட்டிய ஜெயசூர்யா.. நியூசிலாந்தை பந்தாடிய இலங்கை!

Sri Lanka vs New Zealand Test Match : 35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற எதிர்ப்பு.. ஒன்று திரண்ட கிராம மக்கள்...

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்... விசாரணையை தொடங்கிய அதிகாரிகள்

நாமக்கல் பள்ளிபாளையம் அலமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், தாசில்தார் உள்ளிட்டோர் புகாரளித்த பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

Gutka Case : குட்கா வழக்கு.. குற்றப்பத்திரிகை தயார்.. CBI தரப்பில் தகவல்

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் CBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Oscar Award 2025 : ஆஸ்கரில் என்ட்ரியான லாபதா லேடீஸ்... போட்டியில் தங்கலான், வாழை, மகாராஜா..?

Laapataa Ladies Movie Enters in Oscar Award 2025 : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் தங்கலான், வாழை, மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா XXL படங்களும் இடம்பெற்றுள்ளன.

Gutka Case : குட்கா முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. முக்கிய புள்ளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வைத்து கெடு

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எதிரான குற்றபத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு.. சி.வி.சண்முகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.. ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரமாக வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

ஆஸ்கர் விருதுக்கு லாப்பட்டா லேடீஸ் பரிந்துரை

ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கு கிரண்ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் இந்திய பிலிம் சேம்பர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தங்கலான், வாழை, மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்சல் ஆகிய படங்கள் போட்டியில் இருந்தன

Pushpa 2 Update : ’புஷ்பா 2’ படத்தில் இரண்டு புஷ்பாக்களா! காமியோ கொடுக்கப்போகும் அந்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

Cricket Player David Warner in Pushpa 2 The Rule Movie Update : அல்லு அர்ஜுனின் புஷ்பா - 2 திரைப்படத்தில், கிரிக்கெட்டின் புஷ்பா என அழைக்கப்படும் ஒரு வீரர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லியில் 8வது முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

Sadhguru : திருப்பதி லட்டு விவகாரம்: “பக்தி இல்லாத இடத்தில்...” சத்குரு ஆவேசம்

Sadhguru About Thirupathi Ladoo Issue : கோயில் பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்து பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது வார்த்தைகளால சொல்லமுடியாத அளவிற்கு கேவலமான ஒன்று என தனது ஆதங்கத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்குரு தெரிவித்துள்ளார்.