K U M U D A M   N E W S

தவெக மாநாடு; சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது. 

TVK Vijay: தவெக மாநாடு... பொறுப்பாளர்களை தொடர்ந்து சிறப்புக் குழுக்கள்... விஜய்யின் அடுத்த அதிரடி!

வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து, மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

கூல் லிப் பாக்கெட்டில் ஏன் மண்டை ஓடு படம் இல்லை - நீதிமன்றம் கேள்வி

மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆளுநரிடம் புகார்.. நேரடி விசிட் அடித்த அமைச்சர்..பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் புகாரளித்த நிலையில், உணவு விடுத்திக்கு சென்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

TVK Vijay: “அதுவே முடியல... ஆனா நேரடியா முதலமைச்சர் போஸ்ட்..” தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் தடம் பதிக்கவுள்ள விஜய்க்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலைக்கடத்தல் வழக்கு... முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் நிபந்தனையில் தளர்வு

சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

Tamilnadu Rain: ”மீட்புப் பணிகள் இல்லாமல் ஆலோசனைக் கூட்டமா?” திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளாத ஸ்டாலினின் திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு கூட செல்லவில்லை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரெடி - தலைமைச் செயலாளர் எக்ஸ்குளூசிவ்

கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்

அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"24 மணி நேரமும் வேலை" மெல்ல நெருங்கும் அபாயம் - அதிகாரிகளுக்கு உடனே பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

Ajith: புதிய ரேஸ் கார்... கெத்து காட்டும் அஜித்... அந்த சிரிப்பு தான் ஹைலைட்... வைரலாகும் வீடியோ!

அடுத்தடுத்து பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வாங்கி வரும் அஜித், தற்போது புதிய காருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பட்டம் வழங்கிய ஆளுநர்.. மனு கொடுத்த மாணவர்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் அலர்ட்.. ககன் தீப் சிங் அதிரடி ஆய்வு

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயில் ககந்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

4 மாவட்டங்களுக்கு விட்டாச்சு லீவு.. மழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் - உதயநிதி

கனமழை எதிரொலியாக நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... விரைந்த போலீசார்.. ஊட்டியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்

கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

“மழை நீர் தானாகவே வெளியேறிவிடும்” - சென்னை மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர்

சென்னையில் 15 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்யும் பட்சத்தில் மழை நீர் தானாகவே வெளியேறிவிடும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

உரத்திற்கு பதில் களிமண்... வைரலான வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி

கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.