K U M U D A M   N E W S

சென்னையின் முக்கிய சாலையில் திடீர் பள்ளம்... மக்கள் பீதி

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் இன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது.15 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டதுதான்... உதயநிதி பதிலில் முதிர்ச்சியில்லை” EPS ஆவேசம்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

IND vs NZ 1st Test Match 2024 : 5 வீரர்கள் டக் அவுட்.. 46 ரன்களுக்கு ஆல்-அவுட்.. இந்திய மண்ணிலேயே இதுதான் மோசம்

IND vs NZ 1st Test Match 2024 Highlights : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது.

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுக தள்ளாடிருக்கும்.. ஆனால் தப்பிச்சுருச்சு... ராஜன் செல்லப்பா விமர்சனம்!

வானிலை அறிவித்தபடி மழை பெய்திருந்தால் திமுக தள்ளாடி இருக்கும். வெள்ளத்தை வைத்து சிலர் வணிகம் செய்வது உண்டு. அதை யாரும் செய்து விடக்கூடாது என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர். 

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று (அக். 17) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

களத்தில் முதலமைச்சர்.. சொந்த தொகுதியில் அதிரடி ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

கவரைப்பேட்டை ரயில் விபத்து... 25 பேருக்கு பறந்த சம்மன்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பாக 25 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Actor Karthik: நவரச நாயகனுக்கு திடீர்ன்னு என்னாச்சு..? கார்த்திக் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்!

நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கார்த்திக், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கார்த்திக்கின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மீண்டும் பரபரப்பு... அதிரடி சோதனையில் குதித்த வருமான வரித்துறையினர்!

பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக். 17) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புரட்டாசி பெளர்ணமி.. தி.மலையில் அலைமோதும் கூட்டம்

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

காவு வாங்கிய கள்ளச்சாராயம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் 

நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. காரணம் என்ன?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

TVKVijay: அடடே! தோழர்களுக்கு அரசியல் பயிலரங்கம்... தவெக மாநாட்டுக்கு தொண்டர்களை தயார்செய்யும் விஜய்

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கட்சியின் நிர்வாகிகளுக்கு கோச்சிங் கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய்.

இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு... கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணாமலையார் திருக்கோயில்.... புரட்டாசி மாத பூரண பலன்கள்!

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"ஒரு மாத ஊதியம் போனஸாக வேண்டும்" - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.