K U M U D A M   N E W S

'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை

'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை  கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

மும்மொழி கொள்கை தொடர்பாக திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் !

திமுக சார்பில் எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

"2026 தேர்தலுக்கு பின் அதிமுக எங்களிடம் வரும்" - டிடிவி

வைத்திலிங்கத்தை நேரில் சென்று நலம் விசாரித்த டிடிவி, சசிகலா.

மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்.. அதிரடி கைது

கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் கைது.

Today weather: காலையிலேயே தொடங்கியது.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல ஆடுகளுக்கு எமனாக இருந்த சிறுத்தைப்புலி சிக்கியது

பொதுமக்கள் தகவலின் பேரில் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு.. சென்னை ஐஐடி திட்டம்

அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை சென்னை ஐஐடி வரும் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

வார்னிங் கொடுத்த வானிலை மையம்.. இத்தனை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜராகும் மூவர்..

திருப்பத்தை ஏற்படுத்திய சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை.

"தமிழ், தமிழ் என்று கூறி பழைய காலத்தில் வைத்து இருக்கிறார்கள்" - விஜய பிரபாகரன்

"வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து மொழிகளையும் கற்கவும்"

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

பாலியல் குற்றத்திற்கு இதுதான் தண்டனை..! ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா.. வண்ண குடைகளுடன் அம்மனை அழைத்து வந்த மக்கள்

தேர்பவனியில் உலா வந்து காட்சியளித்த பொக்காபுரம் மாரியம்மனை வண்ண வண்ண குடைகளுடன் படுகரின மக்கள் கோயிலை சுற்றி அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் மீது சாதிய கொலைவெறி தாக்குதல்

தூத்துக்குடி; திருவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதற்கு விசிக தலைவர் திருமா கண்டனம்.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் செய்ததை கண்டித்து போராட்டம்.

தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம்: 3 நாட்களாக நடைபெற்ற நாட்டு மாட்டு சந்தை நிறைவு!

ஈஷா சார்பில் நடைப்பெற்ற தமிழ்த் தெம்பு திருவிழாவில் ரேக்ளா பந்தயம் கோலகலமாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்று வந்த நாட்டு மாட்டு சந்தையும் நிறைவடைந்துள்ளது.

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கடத்திய மர்ம நபர்களால் அதிர்ச்சி

ஆம்னி வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள், நடுரோட்டில் வைத்து மாணவியை கடத்திச் சென்றதாக புகார்.

அரசு பணிக்கு தமிழ்மொழி கட்டாயம் - நீதிபதிகள் போட்ட கண்டிஷன்!

தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிய, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து.

தனுஷ்- நயன்தாரா இடையேயான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சொன்னதில் என்ன தவறு? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு ஊழியரின் அலட்சியம்.. பலியான 4 ஆம் வகுப்பு மாணவன்: 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை

அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.