K U M U D A M   N E W S

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

சிறுநீர் கழித்த விவகாரம்.. காவலரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ வைரல்!

காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

தூத்துக்குடியின் அடையாளமாகத் திகழும் பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!

விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

“வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

காசாவில் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள்...கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள்

உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்