மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மகாவிஷ்ணு போன்ற சர்ச்சைக்குரிய நபர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கேட்டது தவறு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்ததாக விசாரணையில் தகவல். மகாவிஷ்ணு பலமுறை மாணவர்களுக்கு உணவளிப்பது போன்ற உதவிகள் செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம்
அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் இருந்து 3 ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவை பறிமுதல் செய்துள்ள போலீஸார், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் அடிப்படையிலேயே மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதியை நேரில் சந்தித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளித்துள்ளார்
சர்ச்சை சொற்பொழிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை, பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.