K U M U D A M   N E W S

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை!

ஆற்காடு அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெற்பயிர்கள் முளைத்து காணப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சொன்னதெல்லாம் பொய்.. வெள்ளை அறிக்கை கேட்கும் தமிழக விவசாயிகள்!

வேளாண்மையில் தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவில் உள்ள நிலையில், வேளாண் உற்பத்தி குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லுக்கான ஆதாரவிலை: மற்ற மாநிலங்களை பாருங்க.. முதல்வருக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320 உடன், தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 சேர்த்து ரூ.3,500 ஆக வழங்கிடுமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விலை போகாத தர்பூசணி- கண்ணீருடன் நிலத்திலேயே அழித்த விவசாயி!

பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

ஊட்டியில் கொட்டிய கனமழை...முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

கமுதியில் கொட்டித்தீர்த்த கனமழை...வெயில் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கமுதி சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது

கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது- அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.