K U M U D A M   N E W S

விலை

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது!

இன்று (செப். 27, 2025) தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு கிராம் ரூ.10,640-க்கும், ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.3,360 உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: மாருதி கார்களின் விலை அதிரடி குறைப்பு

மத்திய அரசு, சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை 28%-லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளதன் பலனை மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா?- அன்புமணி கேள்வி

ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி குறைப்பு: வரிக்குறைப்பு சலுகையைத் தராத நிறுவனங்கள் மீது புகார் அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக சிலிண்டர் விலை ரூ.25 குறைவு

சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. 14 பயிர்களுக்கான MSP விலை உயர்வு

மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.