K U M U D A M   N E W S

பாகுபலி பாணியில் அதிர்ந்த அரங்கம்.. அண்ணாமலைக்கு ஆரவாரம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது, கட்சி துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பிய சம்பவம் பேசுபொருளானது.

இந்தியாவின் பெருமை இளையராஜா.. அண்ணாமலை புகழாரம்

நான் சார்ந்திருக்கும் பிரதமர் மோடி முதல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் விரும்பும் ஒரு மனிதராக இளையராஜா இருப்பதாக அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை... அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது

வெள்ளிங்கிரி மலை ஏற இனி அனுமதி கிடையாது.. வனத்துறை அறிவிப்பு!

கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.

இபிஎஸ் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

சிங்கப்பூருக்கு சீக்ரெட் பயணம்..! டெல்லி தலைமைக்கே தெரியாத ரகசியம்..! தனி ரூட் எடுக்கும் அண்ணாமலை..?

தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் மவுசு கட்சியில் குறையத் தொடங்கியதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, எனவே, அவர் தனக்கான தனி ரூட்டை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரபரப்பு.. கொளுத்தும் வெயிலில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள்!

கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆந்திர மாநில பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி தோஷ நிவர்த்தி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. நாளை மறுதினம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் 1008 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளதால், ஏராளமான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என்றும், சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

வெள்ளையங்கிரி மலையேறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு…வனத்துறை விசாரணை

வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.