K U M U D A M   N E W S

பொதுமக்கள்

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையம்-அவிநாசி சாலை திட்டம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 17 பேர் கைது!

மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரிவாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நில அளவை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி மாவட்டத்திற்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

முதலமைச்சருக்காக நாங்கள் காத்திருக்க வேண்டுமா? – பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்தில் காக்க வைத்ததால் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் உடலை எரிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி விளக்கம்

வேலூரில் உடலை எரிக்காமலேயே அஸ்தி வழங்குவதாகவும், உடலை வைத்து ஏதோ தவறு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு...ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதி

கோயம்பேட்டில் இருந்து மதுரவாயலுக்கு வரும் 33 கிலோ வாட் உயிர் அழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால் மின்வெட்டு

அங்காடி மையம் புதுப்பிப்பு.. குழந்தைகளுக்கு சீர்வரிசை !

பல வருடங்களாக சிலதமடைந்து கிடந்த அங்காடி மையத்தை புதுப்பித்து சீர்வரிசையாக, குழந்தைகளுக்கு உபகரணங்கள் கொண்டு கட்டிடத்தை பொதுமக்களுடன் இணைந்து காவலர்கள் திறந்து வைத்தனர்.