K U M U D A M   N E W S
Kumudam Ad

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவையில் ரயிலை கவிழ்க்க சதி- 6 பேர் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை

சென்னையில் அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன

பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்து...தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சுங்கச்சாவடி நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்களின் உதவியுடன் பேருந்து அவசர கால வழியில் இறங்கி பயணிகள் உயிர்தப்பினர்

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

காசா: உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்.. 2 பேர் பலி, 70 பேர் காயம்!

காசாவில் உணவுக்காகக் காத்திருந்தோர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதிலிருந்து, காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முன்னாள் காதலியை வேவு பார்த்த வழக்கு: டிடெக்டிவ் ஏஜெண்ட் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்!

ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.