K U M U D A M   N E W S

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பெண்கள் ஆதரவை குறைக்கவே விஜய் திமுக அரசை விமர்சிக்கிறார் - அமைச்சர் ரகுபதி

திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பூஞ்ச் மக்கள் மறுவாழ்வு.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

"பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச், ஜம்மு காஷ்மீருக்கு மறுவாழ்வு தொகுப்பு வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாய்.. CHO பதவி வகிக்கும் ரெட்ரீவர்!

ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை - பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முத்த மழை கேட்டேன்.. என்ன ஒரு வித்தை: ஜேம்ஸ் வசந்தன் நெகிழ்ச்சி

தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘முத்த மழை” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளரும்-நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலம் கட்டும் பணியால் பாதிப்பு: 141 மரங்களுக்கு மறுவாழ்வளிக்கும் முயற்சி தீவிரம்

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெட்ட கணக்கெடுக்கப்பட்ட 141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இதற்காக மரங்கள் வேரோடு பிடுங்கிவேறு இடத்தில் நடும் பணி தொடங்கி உள்ளது.

மூத்த மொழி தமிழ் தான்- அன்புமணி ராமதாஸ்

மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.