K U M U D A M   N E W S

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் கமல்ஹாசன்..தமிழில் உறுதிமொழி ஏற்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழப்பு!

பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. ரயில் மீது குதித்த அதிர்ச்சி சம்பவம்

ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.