K U M U D A M   N E W S

ஓவர் டோஸ்.. தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெண்களே உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

விஞ்ஞான ரீதியாக முன்னேறி இருந்தபோதிலும், பழமைவாதத்திலும் நமது இந்திய சமூகம் பின்தங்கியே உள்ளதற்கு சில சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

தனக்கு தொடர்பு இல்லை; அமலாக்கத்துறை கைதை ரத்துசெய்ய வேண்டும் - ஜாபர் சாதிக் மனு ஒத்திவைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  ஜாபர் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கதுறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐ முக்கிய உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பொளந்து கட்டிய அபிஷேக் ஷர்மா - 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.