K U M U D A M   N E W S

பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay: ”விஜய் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்..” அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்... கோட் பிரபலம் அதிரடி!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த பஞ்சாயத்து ஓய்ந்துவிட்ட நிலையில், விஜய் தான் எப்பவுமே சூப்பர் ஸ்டார் என தற்போது சினேகா பேசி மீண்டும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!

''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்... தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, மக்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

'வரலாற்றில் அழிக்க முடியாத தலைவர்'.. கருணாநிதிக்கு புகழ்மாலை சூட்டிய ராஜ்நாத் சிங்!

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி தான். தமிழ்நாட்டில் முதல்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியவர் அவர் தான். வரலாற்றில் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை படைத்த கருணாநிதி, ஒரு மாநிலத்தின் தலைவராக இல்லாமல் தேசிய தலைவராக பார்க்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?.. ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் - ஆ.ராசா சாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு என்று திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கவர்னர் தேநீர் விருந்து.. கலைஞர் நினைவு நாணயம் வெளியீடு.. தொடர்புபடுத்திய இ.பி.எஸ்.

கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்கும் என அண்ணாமலை உறுதிப்படுத்திய காரணத்தால், கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

‘கலைஞர் நினைவு நாணயம்’ - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்..

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?.. சீமானின் பதில் இதுதான்!

''ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சீமான் சாடினார்.

தேவநாதனுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்.. நிதி மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி

நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.