K U M U D A M   N E W S

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - டிடிவி தினகரன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி வலு பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை விரட்ட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்த தம்பதி படுகொலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்.. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர்!

திருவனந்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, CPI(M), காங்கிரஸ் கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை

சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மோடி.. இன்று அம்பாள்.. நாளை கோட்டை-நயினார் நாகேந்திரன் சூளுரை

காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மோடியை பார்த்ததாகவும், இன்று அம்பாளை பார்த்ததாகவும், நாளை கோட்டையில் அனைவரையும் பார்ப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.