K U M U D A M   N E W S

வனத்துறை காவலரிடம் 6.80 கோடி மோசடி... சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனத்துறை பாதுகாவலரிடம், சுமார் ரூ.6.8 கோடி சைபர் க்ரைம் மோசடி நடந்துள்ளது. ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணம் அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் முதலீட்டில் இழந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

செங்கோட்டையன் நிகழ்ச்சியில் அடிதடி..! பறந்த நாற்காலிகள்... பதறிய மாஜி..! பின்னணியில் எடப்பாடியாரா..?

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருவியாக மாறிய 'வாகா' நடிகை உடல் முழுக்க கடத்தல் தங்கம் சிக்கிய 14.8 கிலோ தங்கம்..?

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொருளாளராகும் ஓபிஎஸ்..? அமித்ஷாவின் 30 நிமிட மீட்டிங்..! விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு…!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு.. அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?

இந்தியாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்

இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது - டிரம்ப்

கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.