K U M U D A M   N E W S

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!

மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகல்? - டி20 உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

வரலட்சுமி சரத்குமார்: இயக்குநர், தயாரிப்பாளராகப் புதிய அத்தியாயம் - சகோதரியுடன் இணைந்து தோசா டைரீஸ் தொடக்கம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.