K U M U D A M   N E W S

அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

விராட் கோலியுடன் இணையும் STR.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பஹல்காம் தாக்குதல்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒருவரையும் விடமாட்டோம்” – ராஜ்நாத் சிங்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!

சென்னை காவல் துறையின் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.