K U M U D A M   N E W S

முதலமைச்சரை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கமுடையது - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் இபிஎஸ்.. முதலமைச்சர் விமர்சனம்

நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நாகரிகம் திருக்குறள் - கவிஞர் வைரமுத்து

தமிழர்களின் நாகரிகம் எது என்று கேட்டால் திருக்குறள் என கூறுங்கள் தந்தை திருவள்ளுவர் ஞான தந்தை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

தமிழக உரிமை விவகாரத்தில் முதலமைச்சர் சமரசம் செய்யமட்டார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

2026-ல் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் - திருமாவளவன் பேட்டி

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா?- மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரர்

பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாத்துறாங்க, புகார் கொடுத்தால் காவல்துறை என்னையே மிரட்டுராங்க. கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றிய எனக்கு இந்த நிலைமையா என மாவட்ட ஆட்சியர் முன் கதறிய முன்னாள் ராணுவ வீரரால் பரபரப்பு

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...அதிகளவில் குவிந்ததால் அலைமோதிய கூட்டம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.