Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை
விருத்தாச்சலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலமாக செல்ல முயன்ற காங். MLA ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும், MLA ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.
கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றனர். கண்டெய்னரை திறக்க முயன்ற போது இன்ஸ்பெக்டரை கொள்ளையன் ஒருவன் வெட்டியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.