K U M U D A M   N E W S

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கழிவறை வசதி இல்லாத அரசு பள்ளி.. மாணவ மாணவிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு பள்ளி கழிப்பறை இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வரும் நிலையில், 67 இலட்சம் செலவில் கட்டிய புதிய பள்ளி கட்டிடத்தில் கழிப்பறை எங்கே என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை - செல்போன்கள் தடயவியல் ஆய்வு

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா..? விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படை அட்டூழியம் – மீண்டும் கைது செய்யப்பட்ட மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூத்த மருத்துவர்களை பணியில் நியமிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்,  கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என  தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிஞ்சுகளை காவு வாங்கிய தந்தை - போலீசாரையே அலறவிட்ட வாக்குமூலம்

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரையும், குழந்தைகளையும் வெட்டியதாக கைதான அசோக்குமார் பரபரப்பு வாக்குமூலம்

ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்

ஜூன் மாதம் முதல் ஆசிரியர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி தெரிவித்துள்ளார்.