கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் என ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்