K U M U D A M   N E W S

Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

”கல்லூரிகளை மூடிவிடலாம்” - தமிழக அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்

அரசு சட்ட கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

#BREAKING : பேராசிரியர் பணியிடம்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு

சொத்து வரி உயர்வை கண்டித்து அக்.8ம் தேதி மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு

சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அரசின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

கல்லறைகளை பாதுகாக்கத்தான் தொல்லியல் துறையா..?

தொல்லியல் துறையினரின் நடவடிக்கையை பார்த்தால், பழங்கால சின்னங்களை அல்ல, கல்லறைகளை பாதுகாப்பதே பணியாக நினைப்பதாகத் தெரிகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது... காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

RSS March : எதிர்காலத்தில் இப்படி செய்யக் கூடாது - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

RSS March in Tamil Nadu : ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கோவை ஈஷா யோகா மையத்தில் பரபரப்பு.. போலீசார் அதிரடி ஆய்வு..

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காமராஜ் என்பவர் செனனி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷாவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.