K U M U D A M   N E W S

உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்  பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து  பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு காவல்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி..!

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது

ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றம் தடாலடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யே விசாரிக்கும் உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

ரூ.8 லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு

போலீசார் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

பண மோசடி வழக்கு..  ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டது.

ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.