K U M U D A M   N E W S

அரசு

Teachers Appointment : நிதி சிக்கலால் ஆசிரியர் நியமனம் நிறுத்திவைப்பு..?

TN Govt Teachers Appointment Suspension : நிதி சிக்கல் காரணமாக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட நியமனங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.

Mayor Visit : கேமராவுடன் சென்ற மேயர்... 3 நிமிடத்தில் பள்ளியை தூய்மை செய்து அசத்தல்

Cuddalore Mayor Visit Govt School : கடலூரில் பள்ளியை ஆய்வு செய்ய மேயர் சென்ற நிலையில் சுத்தம் செய்யாமல் இருந்த வகுப்பறையை சுத்தம் செய்தார். மேலும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Mysterious Fever : மதுரைக்கு வந்த சோதனை...மலைத்து போன மக்கள்

Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

RSS அணிவகுப்புக்கு அனுமதிக்க தாமதம் ஏன்..? - நீதிமன்றம் அதிரடி கேள்வி

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா, பசுமைவெளி!

சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Bus Driver Attack : வழிவிடாமல் சென்ற தனியார் பேருந்து.. முந்தி சென்று தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்

Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.