K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசியல்

குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு

அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை…மெளனம் கலைகின்றேன் – மல்லை சத்யா

என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை

பரந்தூர் விமான நிலையத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்..அரசியல் தலைவர்களை சந்திக்க போராட்டக்குழு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் - நடிகர் அருண்பாண்டியன்

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே பயன்படுத்தப்படுவதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தை-மகன் மல்லுக்கட்டு தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமேக்ஸ் காட்சி!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.