கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலர்கள்.. மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த டி.ஜி.பி
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
நாமக்கலில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிபட்டியில் 100 நாள் வேலையில் பணியாற்ற ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி வேலை வழங்காமல் திருப்பி அனுப்பியதால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட ஒரே சிரஞ்சை செவிலியர்கள் பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குளாங்குறிச்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் கிராமத்தினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 1௦ மாவாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பல்லவன் விரைவு ரயிலில் பயணி மற்றும் டிடிஆர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றிய நிலையில் பயணியை டிடிஆர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை தாக்கிய டிடிஆர் மீது பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் அக்.8-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளுக்கும் உட்பட்ட வட்டங்களிலும், நகராட்சிகள், பேருராட்சிகளிலும் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியர்கள் அவசியமின்றி ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமூகநீதி பேசப்படுகிறதே தவிர, அது நடைமுறையில் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களால் வெட்கமும், வேதனையும் படுகிறேன் என தெரிவித்தார்.
சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காந்தி சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் போட்டி ஏற்பட்ட நிலையில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை. தயாரிப்பு நிறுவனத்திற்கு மாறாக வரும் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகளை நம்ப வேண்டாம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அடையாறில் உள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்த விசிக தலைவர் திருமாவளவன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை. இதனால் மகாத்மா காந்தியை திருமாவளவன் புறக்கணித்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தியில் 156 வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.